தென்காசியில் கோவிட்19 நோயால் இறந்தவரின் உடலை கண்ணியமான முறையில் நல்லிரவில் நல்லடக்கம்..
தென்காசியைச் சார்ந்த பெண் கொரொனா கோவிட்19 தொற்று நோயால் உயிரிழந்தார். உடனடியாக அந்த பகுதிக்கு பசியில்லா தமிழகம் அறக்கட்டளையின் பெறுப்பாளர்கள் தண்ணர்வலர்கள் விரைந்து சென்று நல்லடக்கத்திற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டனர் தென்காசி நகராட்சியைச் சார்ந்த கைலாச சுந்தரம் அவர்கள் தண்ணர்வலர்களுக்கு. தேவையான முதலுதவி உபகரணங்கள் அனைத்தையும் கொடுத்து அதற்கான பாதுகாப்பு பற்றி தென்காசி காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் அவர்கள் பாதுகப்புகள் அளித்தும் தென்காசி நகராட்சி யைச் சார்ந்த இஸ்மாயில் அவர்களின் ஆலோசனையுடன் JCB மூலம் 12 அடி குழி தோண்டப்பட்டது. இறந்தவரின் உடலை பசியில்லா தமிழகம் அறக்கட்டளையின் தண்ணர்வலர்கள் தென்காசி பகுதியில் உள்ள தன்னார் வலர்கள் இணைந்து அரசு அறிவித்த வழிமுறைகளின் படி நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இனி_ஒரு_உயிரை_ இழக்க_விடமாட்டோம்.
தொடர்ந்து களப்பணி செய்து கொரோனாவை நமது தென்காசியை மட்டும் அல்ல இந்த உலகத்தை விட்டே விரட்டி அடிப்போம். என சபதம் ஏற்றனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment