தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு ஒரு மணிநேரம் வெளி நடப்பு ஆர்பாட்டம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஒரு மணிநேரம் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் வைத்திலிங்கம் தலைமை வகித்தார கோரிக்கைகளை விளக்கி வட்டாசியர் பட்டமுத்து சிறப்புறையாற்றினார் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு முடிவின்படி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் நியாயமான கோரிக்கைகளான பணி வரன்முறை படுத்துவது பதவி உயர்வு வழங்குவது மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்குவது ஊதிய முரண்பாடுகளைக் களைவது..... கொரோனா முன் தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வருவாய் துறை ஊழியர்களுக்கு நிவாரண தொகை வழங்குவது.... அலுவலக உதவியாளர் , இரவு காவலர்,மசால்ஜி பதிவறை எழுத்தர்,ஈப்பு ஓட்டுநர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிறைவேற்றுவது... வருவாய்த் துறையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கை வைத்து கோஷங்கள் எழுப்பபட்டனர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் கணேசன் மற்றும் தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் தோழர் பழனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்... தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் மற்றும் அனைத்து துறை சங்க ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் கங்காதரன் நிறைவுரை ஆற்றினார்... இறுதியில் மாவட்ட பொருளாளர் நன்றியுரையாற்றினார்..ஆர்ப்பாட்டத்தில் 3 பெண்கள் உட்பட 32 பேர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்...
No comments:
Post a Comment