விஜயதசமிக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு.....
புதுடெல்லி : மத்திய அரசு 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்தாண்டு வரும் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை விஜயதசமிக்கு முன்பாக ஒரே தவணையில் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் இதற்காக 3,737 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அருண்குமார்,
மூத்த பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment