ரூ 44 கோடி மதிப்பில் அம்பை அருகே 480 அடுக்கு மாடி வீடுகள் அடுத்த மாதம் திறப்பு....
அம்பாசமுத்திரம் ஆர்டிஓ அலுவலகம் அருகே நகர் புற வீட்டு வசதி திட்டம் கீழ் அம்பை விகேபுரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு ரூபாய் 44 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 480 அடுக்கு மாடி வீடுகள் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. அந்த வீடுகளை அம்பாசமுத்திரம் எம்எல்ஏ ஆர். முருகையா பாண்டியன் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகே பொறியாளர் மாடசாமி , அம்பை ஒன்றிய செயலாளர் விஜய பாலாஜி (எ) துர்க்கை துரை, துணை செயலாளர் பிராங்கிளின், மாநில பேச்சாளர் மின்னல் மீனாட்சி சுந்தரம், நகர செயலாளர்கள் அறிவழகன், கண்ணன் , ராமையா, முன்னாள் நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, அம்பை சூப்பர் மார்க்கெட் தலைவர் சங்கரலிங்கம், நகர எம் ஜி ஆர் இளைஞர்அணி செயலாளர்கள் சிங்கை அருண், அம்பை சண்மு , மாவட்ட பிரதிநிதி சுடலை , முனியசாமி வக்கீல் குமார் மற்றும் பலர் உள்ளனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment