தென்காசி மாவட்டம் சுரண்டையில் வாழ்ந்துவரும் சமூக ஆர்வலர்கள் வாழ்வாதரம் பாதித்தவர்களுக்கும் கால் நடைகளுக்கும் உணவு வழங்குகி வருகின்றனர்...
தென்காசி மாவட்டம் சுரண்டை மற்றும் கீழச்சுரண்டை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கேபிள் பவுன்ராஜ் M. மனோஜ் S. சுப்பிரமணியன் S.ராம்குமார் ஆகியோர் கடந்த சில மாதங்களாக தென்காசி மாவட்டம் குற்றாலம் ,ஐந்தருவி, ஆகியபகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு கால்நடைகளுக்கும் உணவு வழங்கிவருகின்றனர். தற்போது நடைப்பெறும் கொரோனா வைரஸ் - 19 தொற்று பரவல் காரணமாக நான்கு மாதங்களுக்கு மேலாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை தமிழக பிறப்பித்துள்ளது இதனால் இப்பகுதியில் உள்ள கடை நடத்தி வரும் தொழிலாளர்கள் சுற்றுலா பயணிகள் யாரும் வராத காரணத்தினால் வேலைகளை இழந்த நிலையில் மிக கஷ்டத்தில் வறுமையில் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு வாழ்ந்துவருகின்றனர். இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் கேபிள் பவுன்ராஜ், மனோஜ், சுப்பிரமணியன், ராம்குமார், ஆகியோர் உணவுகள், பொரிகடலை ,வாழை தார்களை மற்றும் வெல்லம் ஆகியவற்றை வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட வர்களுக்கும் வாயில்லா ஜீவன்கள் ஆடு, மாடு, குரங்கு ஆகிய விலங்குகளுக்கு வழங்கிவருகின்றனர் இவர்களது சேவையை பொதுமக்கள் மிகவும் பாரட்டி வருகின்றனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்
No comments:
Post a Comment