தென்காசி மாவட்டம் குருவிகுளம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா..
திருவேங்கடம் தாலுகாகவுக்கு உட்பட்ட குருவிகுளம் தேரடி திடலில் கல்விக்கு கண் திறந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் ஐய்யா" *காமராஜர்"* அவர்களின் 118-வது பிறந்த நாள் விழா. முன்னிட்டு அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து கட்சிக்கொடி ஏற்றி இணிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் சந்தர்ராஜ் தலைமை தாங்கினார் .வட்டார செயளாலர் அழகை கண்ணன் முன்னிலை வகித்தார் . மாவட்ட பொது செயளாலர் புதூர் திருப்பதி , மாவட்ட எஸ்சி .எஸ்டி பிரிவு துணைத்தலைவர் ராஜ்குமார் , குருவிகுளம் நகர பொறுப்பாளர்கள் பெரியவர் குருசாமி ஆசாரி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பு செய்தனர். மேற்படி நிகழ்ச்சியில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.
கோவிந்தராஜ்,
தென்காசி மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment