செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலையில் நெடுநாட்களாக பழுதடைந்து மக்களுக்கு இடையூறாக மின் கம்பங்களை தகவல் அறிந்ததும் உடனடியாக மாற்றியமைத்த செயற்பொறியாளர் மனோகரன்...
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் வள்ளிபுரம் ஊராட்சியில் செங்கை சாலையில் நெடுநாட்களாக பழுதடைந்து மக்களுக்கு இடையூறாக இருந்து வந்த மூன்று மின் கம்பங்களை மாற்ற வேண்டி தமிழ்நாடு மின்சார வாரிய செங்கல்பட்டு செயற்பொறியாளர் (அமைப்பு மற்றும் பராமரித்தல்) மனோகரன் நேற்று (30/06/2020) மொபைல் வழி கோரிக்கை தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்கம் சதுரங்கப்பட்டினம் உறுப்பினர்கள் சார்பாக அனுப்பப்பட்டது. இந்தக் கொரோனா பொது முடக்க காலத்திலும் துரிதமாக செயல்பட்டு இன்று மூன்று மின் கம்பங்களை உடனடியாக மாற்றி அக்கிராம மக்களுக்கு உதவி செய்த தமிழ்நாடு மின்சார வாரிய செங்கல்பட்டு மாவட்ட செயற்பொறியாளர் மனோகரனை இம்மாதிரியான பொது முடக்க காலத்திலும் துரிதமாக செயல்பட்டமைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர.
ரஹமத்துல்லா கல்பாக்கம்.
No comments:
Post a Comment