காவல்துறையினரால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரியில் மரணம்..
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா V.K. புதூர் அரசினர் மேல்நிலை பள்ளி தெரு , என்ற முகவரியில் வசித்து வரும் நவநீத கிருஷ்ணன் என்ற இசக்கி மகன் குமரேசன் ஆட்டோ ஒட்டுநர் என்பவரை V.K புதூர் காவல்நிலைய காவல்துறையினரால் தாக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரியில் அனுமதிக்கப்பட்டர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 10 மணியளவில் இறந்துவிட்டதாக விசாரணையில் தெரிய வருகிறது,
இது தொடர்பாக வீகேபுதூர் கிராம பொது மக்கள் சுரண்டை To ஆலங்குளம் சாலையை மறித்து சாலை மரியல் செய்து வருகின்றனர்,
நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்பும் மக்கள் சம்பந்தப்பட்ட Si மீது நடவடிக்கை எடுக்காமல் கலையமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி, மாவட்ட செய்தியாளர் கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment