பழுதடைந்த மேல் நிலை நீர் தேக்க தொட்டியை மாற்றிதர வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு....
தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியம் தெற்க்கு குருவிகுளம் ஊராட்சி அழகனேரி கிராமத்தில் சுமார் 60,000 ஆயிரம் கொள்ளவு உள்ள மேல் நிலை தண்ணீர் தொட்டி உள்ளது. அது தற்போது பழுதடைந்து கிழே விழும் அபாய நிலையில் உள்ளது. அதை மாற்றி புதிய மேல்நிலை தண்ணீர் தொட்டி மற்றும் புதிய தரைமட்ட நீர் தேக்க தொட்டி 60,000 லிட்டர் கொள்ளவு அமைத்து தர வேண்டியும் மேலும் அழகனேரி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் சர்வே எண் 118-ல் தரைமட்ட நீர் தேக்க தொட்டி ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு பயன்பாட்டிற்க்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து புதிய தரை மட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டி தர வேண்டிகிறேன் மேற்படி பணி செய்வதால் பொதுமக்களுக்கு குடி நீர் தேவைகள் பூர்த்தியாகும் என்றும் பொதுமக்களின் நலன் கருதி குருவிகுளம் ஒன்றிய குழு உறுப்பினரும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஒன்றிய, பொறுப்பாளர் அழகை கண்ணன் தென்காசி மாவட்ட ஆட்சி தலைவரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளளர்.
தென்காசி மாவட்ட செய்தியாளார் A.கோவிந்தராஜ்...
No comments:
Post a Comment