கடலூர் மாவட்டம் சி. என். பாளையம் ஊராட்சியின் பேரிடர் காலத்தில் மக்களின் துயர் துடைக்க ஊராட்சி நிர்வாகம் முன்வருமா?
கடலூர் மாவட்டம் சி. என். பாளையம் ஊராட்சியின் கடைவீதியில் உள்ள பொது குடிநீர் தொட்டி மற்றும் மின் மோட்டார் பழுதடைந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை சரிசெய்யப்படவில்லை இங்கு வசிக்கும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் குடிநீர் இன்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தலையிட்டு துரித நடவடிக்கை எடுத்து இந்த பேரிடர் காலத்தில் மக்களின் துயர் துடைக்க ஊராட்சி முன் வரவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
P.செந்தில்குமார்
நிருபர், C.N.பாளையம்
தேசிய மக்களாட்சி
No comments:
Post a Comment